Perumthachan -1991 -G. Jayakumar
தடம் வைத்த மணல் சரிவதை போல சரிந்து கொண்டே சென்றன காட்சிகள் .சுதாரிக்க நேரம் கொடுக்காமல் முதல் காட்சியிலிருந்தே நம்மை உள்ளிழுத்துக்கொண்ட கதை, இறுதிவரை தன்னோடு பிணைத்து வைத்துக்கொள்கிறது .பார்வையாளனை இருப்புகொள்ளமுடியாமல் செய்ய அலைந்து திரியும் கதை கட்டமைப்பும் ,கேமரா கோணங்களும் , வேகமான இசையும் கட்டாயமில்லை என்றுணர்த்துகிறது இந்த கதையின் ஸ்த்திரத்தன்மை .
தனக்கு குழந்தை ஒன்று இருக்கிறது என்பதை செல்லுகையில் அவர் முகத்தில் படரும் வெட்கம் , பால்ய தோழனை பார்க்கையில் இயல்பாய் வெளிப்படும் வாத்சல்யம் . மாடிப்படியிலிருந்து திரும்புகையில் நண்பனை எதிர்கொள்ளமுடியாமல் திணறும் காட்சி .போன்றவற்றில் நடிப்பால் நம்மை திணறடிக்கிறார் அவர் .படைப்புத்துறையில் இருக்கும் அனைவரும் நிச்சயம் தரிசிக்க வேண்டியது இந்த பெருந்தச்சனின் பாண்டித்யம்

No comments:
Post a Comment