Friday, 1 September 2017

Arjun Reddy - 2017 - Sandeep Vanga




   
  ஒரு கதை கால ஓட்டத்தில் தன் ஸ்திரத்தன்மையை இழந்துவிடாமல் , களம் , கதாபாத்திரங்கங்கள் மாறினாலும் அதன் ஸ்வாரஸ்யத்தை இழக்காமல் தன்னை மீள் உருவாக்கம் செய்துகொள்கிறது என்றால் ! அதை காவிய கதையாகக்கொள்ளலாம் என்றால் ! இந்தப்படம் அதுபோன்றதொரு காவியக்கதையின் இன்றைய பரிமாணம் .
இந்த கதையை பரிமாறிய விதத்தில் இயக்குனர் தனித்து தெரிகிறார் .அவரின் மேதமைத்தன்மை அர்ஜுன் கதாபாத்திரத்தின் வார்ப்பில் தெரிந்தது .


    குடும்பம் தோழர்கள் என்று சுற்றியுள்ள ஏனைய மனிதர்கள் புறவயமாக தவறான விஷயம் என்று சுட்டும் அனேகத்தையும் தன்னகத்தே சூடிக் கொண்டவன் ,ஒரே ஒரு விஷயத்தில் அவர்களிடமிருந்து மேம்பாட்டு நிற்கிறான். அகவயமாக அவர்களிடம் இல்லாத தன்னறம் இவனிடம் இருக்கிறது . அதுதான் அந்த கதாப்பாத்திரத்தின் ஆன்மா . அதுவே படத்தின் மையச்சரடாக நிற்கிறது . அதன் தன்னறத்தின் அதீத வெளிப்பாடு இறுதிக்காட்சியிலும் அழகாக வெளிப்பட்டிருக்கும் .அந்த காதாபாத்திரத்தின் வார்ப்பே அந்த காவியக்கதையை ஒரு படி மேலான தளத்தில் நிறுத்தி நம்மை வசீகரிக்கிறது .

Thursday, 31 August 2017

நாமளா சொல்லிகிட்டாதான் உண்டு


நிசப்த சாலையில்
வீடு திரும்புகையில்.
தம்ஸப் காட்டி
நிறுத்த முற்பட்டவனை
தவிர்த்துவிட்டு வந்தவன்.
சுமந்து திரிகிறேன்
இரண்டு நாட்களாய் !

31.08.2018