Thursday, 30 August 2018

மேற்குதொடர்ச்சிமலை

உலகமயமாக்களை படம் பேசுகிறது என்று சொன்னாலும் அது லோகுகள் & ரங்குகளின் முரண் கதையையும் பேசுகிறது . இருவரும் உழைப்பாளிகள் ஒரே ஊரில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இருந்தும் "தன்னறம்" என்ற ஒரு புள்ளியில் இருவரும் வேறுபடுகிறார்கள். லோகுவின் கதாபாத்திரத்தை பல கதைகளில் நாம் பார்த்திருப்போம். அவை சிறிதாய் தொடங்கி விஸ்வருபம் எடுக்கும் அந்த கதைகளில் லோகுக்கள் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட்டு ரங்கு கதாபாத்திரம் நிழலாய் தொடர்ந்திருக்கும் அந்த கதைகளில் வெளிச்சம்படாத ரங்குகள் நமக்கு ஒரு பொருட்டே அல்ல . அந்த வெளிச்சத்தை மாற்றி ரங்கு கதாபாத்திரதின் மேல் பாய்ச்சியதில் இருக்கிறது இயக்குனரின் மேதமை .

இதுபோன்ற படங்கள் பேசும் கனமான விஷயமும் இயல்புக்கு நெருக்கமான மண்சார்ந்த கதைக்களமும் பல நேரங்களில் பார்வையாளனுக்கு அயற்சியையே கொடுத்துச் செல்லும் . அப்படியிருக்கையில் அயர்ச்சியை கொடுக்காத காட்சிகளின் நகர்வே படத்தின் முதுகெலும்பெனத் தோன்றுகிறது. இதுதான் மற்றைய விருது விழாப்படங்களிலிருந்து இந்த படத்தை தனித்து காட்டுகிறது (பயப்படாமல் தியேட்டரில் போய் பார்க்கலாம் ) .சில காட்சிகளில் உணர்ச்சிகரமான விஷயங்களை கொஞ்சம் அதிகப்படுத்தி நம்மை கதற விட்டிருக்கலாம் ஆனால் எந்தஒரு தருணத்திலும் பார்வையாளனுக்கு அசூகையை ஏற்படுத்த இயக்குனர் விரும்பவில்லை . அவரது நோக்கம் அதுவே அல்ல என்பதை பல இடங்களில் நிறுவுகிறார்

Monday, 27 August 2018

ஆண்களுக்கானதடி

ஆண்களுக்கானதடி என்கிறேன்.
ஊருக்கு என் வாசம் எதுவாக இருந்தால் என்ன!
உன் வாசம் என்னோடு இருக்கட்டும்
என்றபடி என் வாசனை திரவியத்தை
வலதிடதாய் தூவிக்கொள்கிறாள்.
வாசம் பரவுகிறது என்னுள்