உள்ளங்கவர் கள்வர்கள் - ஜாக் ஸ்ப்பேரோ
ஜாக் ஸ்ப்பேரோவின் நாடோடித்தனமான அந்த உடைப்பற்றி விசித்திரமாக தோன்றிக்கொண்டிருக்கும் . அதற்கான காரணத்தை இந்த பாகத்தில் தெளிவுபடுத்தினர் . ஒரு இக்கட்டான சூழலில் சக கடற்கொள்ளையர்களின் கப்பல்கள் சூறையாடப்படுகிறது , ஜாக்கின் கப்பல் மட்டும் சேதமாகாமல் இருக்க தந்தை கொல்லப்படுகிறார் , இறுதித்தருவாயில் ஜாக்கிடம் கப்பலை ஒப்படைக்கிறார் இனி எல்லாம் உன் கையில்தான் என்று சொல்லிவிட்டு இறக்கிறார் . விடலைப்பையன் ஜாக் முன் இடப்பட்ட முதல் சவால் அது , சாதுர்யமாக அவன் அந்த சவாலை முடிக்கிறான் . அதுவரை அவனை கேப்டனின் மகன் , விளையாட்டு பையன் என்றிருந்த சக கொள்ளையர்கள் அன்றுமுதல் அவனை தலைவனாக ஏற்கின்றனர் . அப்போது தங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு பொருளை அவனிடம் அற்பணிக்கின்றனர் அந்த வெற்றிக்கு ஈடாக . அப்படி கிடைத்தவைதான் அந்த தலைப்பாகை , மணிகள் , கொம்பு போன்ற விசித்திர பொருட்கள் . ஜாக் அதை சூடிக்கொள்கிறான். அதன் பின் அவன் எத்தனையோ வெற்றியை நிகழ்த்தியிருந்தாலும் அந்த முதல் வெற்றி அவனுக்கு விலைமதிப்பற்றது .அந்த வெற்றியை என்றும் தன்னோடு வைத்துக்கொண்டிருக்கிறான் அந்த
