இந்தக் கரு ஒரு பெரும் நாவலுக்கானது அதை எழுதும் ஆவலும் திறனும் அவருக்கு இருந்தும் . தத்துவார்த்த விஷயங்கள் விரவிக்கிடக்குமதை வாசிப்பது வாசகனின் பொறுமைக்கு பெரும் சோதனையாகிவிடுமோ! என்பதால் அந்த எண்ணத்தை கை விட்டதாக சொல்கிறார் . வாசித்து முடிக்கையில் அந்த முடிவு எவ்வளவு தெளிவானது என்று நம்மால் உணரமுடிகிறது .சிறுகதையாகவும் சுறுக்க முடியாத ஒன்று, அளவுக்கு அளவுன்னு வாலி சொல்லுவார் அது போல கூடாமல் குறையாமல் கச்சிதமாக இருந்தது . ஒரே மூச்சில் வாசித்துவிடலாம் .
சதாசிவம் யார்? என்ற கேள்வி ராஜாவைப் போலவே நம்மையும் கதை நெடுக துரத்துகிறது. சதாசிவம் கூறும் தத்துவார்த்த விஷயங்களுக்கு எதிராக தர்க்கமாய் ராஜாவினுள் எழும் கேள்விகள் நம்முள்ளும் எழுகிறது . ஒரு கட்டத்தில் கதைப் போக்கில் நாம் சிந்திப்பதைத்தான் ராஜா சிந்திக்கிறான் அல்லது அவன் சிந்திப்பதைப் போன்றே நாம் சிந்திக்கிறோம். அது ஒரு சுவாரஸ்ய விளையாட்டாக கதை நெடுக நிகழ்கிறது .
ஆரம்பத்தில் இருந்த அழுத்தமும் வேகமும் இறுதியில் நகர நகர வடிவதும். மிக எளிமையாக கதை நிறைவுருவதும் ஒரு வித வெறுமையைக் கொடுத்தாலும். வெறுமைக்கும் எளிமைக்கும் இட்டுசெல்வதுதானே தத்துவங்களின் தகவு என்று சொல்லாமல் சொல்கிறாறோ என்று தோன்றுகிறது.
#உயிரின்_யாத்திரை
#எம்_வி_வெங்கராமன்