தேங்காய்க்கு வெல்லத்தை கரண்டி தின்றுகொண்டு சோம்பித்திரிந்து தம்பியுடன் கட்டிப்புரண்டு சண்டைபோடும் சஜியும் இடைவேளைக்கு பின் வரும் சஜியும் ஒன்றல்ல என்பதை இரண்டு முறையும் சஜி ஷம்மியிடம் பெண் கேட்கும் தொணியில் நமக்கு புரியவைத்திருப்பார் இயக்குனர். சஜி தன் வாழ்வில் சந்திக்காத அழுத்தம் இல்லை இருந்தும் அவன் நேரடியாக உருவாக்கியதொரு அழுத்தம் அவனை உடைத்துப்போட்டு பண்படுத்துகிறது .சஜி கூப்பிட்டிருந்தால் அந்த அம்மா வந்திருப்பாரோ ! அவரை கூப்பிட்டு சங்கடப்படுத்தக்கூடாது என்ற பக்குவநிலையில் சஜி இருந்தான் என்பது பின்புதான் நமக்கு விளங்குகிறது.
பிரேமத்துல பி.டி வாத்தியார், மகிஷிண்டே பிரதிகாரத்திலே போட்டோ பிரேம்கடை டிசைனர், சார்லியில் திருடன், சமீபத்தில் சுண்டி பிரம் சூடானில் டீம் மேனேஜர் என்று நம் நினைவில் நிற்கும் எத்தனையோ கதாபாத்திரங்களை சாபின் ஷபீர் செய்திருந்தாலும் அனைத்தையும் விஞ்சும் பாத்திர வடிவாக சஜி கதாபாத்திரம் அவருக்கு வாய்த்திருக்கிறது . சாரத்தை சரி செய்துகொண்டு கதவைத் திறக்கும் முதல் காட்சியில் தொடங்கி கதவிடுக்கின் வழியே காண்டத்தை பரிசாக சுண்டிவிட்டு நகரும் கடைசி காட்சி வரை அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு நொடியும் நடிப்பால் நம்மை வசிகரிக்கிறார்.படம் ஒரு நாயகனின் கதை இல்லைதான் இருந்தும் இவர்தான் நாயகனோ என்று நம்மை சந்தேகிக்க வைக்கிறார் .
