"இடுக்கண் வருங்கால் நகுக" என்பதை நடைமுறைப் படுத்துவதில் பல சிரமங்கள் இருக்கின்றனதான் . அப்படி ஒரு சூழலில் நகுவதற்கு ஒருவித பக்குவம் வேண்டுமென்றால் . அந்த சூழலை பகடிஎழுத்தாக்கி எண்ணற்றவர்களின் முகத்தில் முறுவலை முகிழ்த்தெடுக்க எப்படிப்பட்டதொரு பக்குவநிலை வேண்டும் ! அப்படியொரு நிலையில் பஷீர் எழுதியதுதான் "பாத்துமாவின் ஆடு " .எழுதி ஐந்து ஆண்டுகள் கழித்து, பிரசுரிக்கும் முன் அதன் கையெழுத்துப் பிரதியை வாசிக்கையில் அதில் எந்த திருத்தமும் தேவைப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். அவருடைய எழுத்தில் எந்தவித திருத்தங்களும் செய்யாமல் எழுதியது எழுதியபடி வாசகர்களை சென்றடைந்தது பாத்துமாவின் ஆடுமட்டுமே என்கிறார் .நெருக்கடியானதொரு நிலையில் பிரவாகமாக எழுதி அப்போதைய வாழ்வின் அழுத்தத்தை கடந்திருக்கிறார்.
காட்டாறுகளின் கரையில் படகு கட்டி ஆறுவழியே கொண்டுவந்து கோச்சியில் படகு வியாபாரம் செய்த குடும்பம் இப்போது சாம்ப காய் விற்றுக்கொண்டிருக்கும் நிலை . அதுநாள் வரை தனித்திருந்தவர் . சூழலால் அந்த குடும்பதோடு வாசம் செய்யவேண்டிய நிலை . அங்கு நிலவும் விசித்திர சூழல் & உறவுகள் அவரை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது . பாரதிதாசனின் இருண்டவீடு போன்றிருக்கும் அந்த வீட்டை எழுத்துச் சாளரம் விரித்து நமக்கு காட்டுகிறார் சிரித்துக்கொண்டே . சாதாரண குடும்ப புராணமாக இதை கடந்துவிட முடியவில்லை. அவ்வளவு உண்மையாக அனைவரையும் விமர்சிக்கிறார் அவரையும் சேர்த்து . நம்மையறியாமல் பல பக்கங்களில் வாய்விட்டு சிரிக்கிறோம் அப்படி ஒரு பகடி. குடும்ப உறவுகள் சிலரை தவறாக சித்தரித்திரித்திருக்கிறார் என்றுச் சொல்லி ஒரு படைப்பையே பல வருடம் அழுத்தி வைத்திருந்ததெல்லாம் தமிழில் நடந்துள்ளது . எப்படி பஷீரின் உறவுகள் இயல்பாய் இந்த புத்தகத்தை அணுகினார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது.
படைப்பு நிகழ்ந்த பிறகு எழுத்தாளன் மறைந்து விடுகிறான் பின் படைப்புதான் என்று சொல்வதுண்டு . ஆனால் நிதர்சனத்தில் படைப்புகள் ஊடே நாம் படைப்பாளியை கண்டடைய முயல்கிறோம். நாம் அடைவது உண்மையான பிம்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்ற உண்மை புரிந்திருந்தும் நம் வாசக மனதில் அது ஒரு அனிச்சைச் செயலாய் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது .அந்த மனதிற்கு தீனியாக சில படைப்பாளிகள் தம் படைப்புகளில் சில கண்ணிகளை விட்டுச்செல்வர் . இவர் இந்த புத்தகம் முழுதும் கண்ணி வெடிகளை விட்டுச்சென்றிருக்கிறார் .
பாத்துமாவின் ஆடு
வைக்கம் முகமது பஷீர்
தமிழில் - குளச்சல் மு .யூசப்
காலச்சுவடு பதிப்பகம்.
காட்டாறுகளின் கரையில் படகு கட்டி ஆறுவழியே கொண்டுவந்து கோச்சியில் படகு வியாபாரம் செய்த குடும்பம் இப்போது சாம்ப காய் விற்றுக்கொண்டிருக்கும் நிலை . அதுநாள் வரை தனித்திருந்தவர் . சூழலால் அந்த குடும்பதோடு வாசம் செய்யவேண்டிய நிலை . அங்கு நிலவும் விசித்திர சூழல் & உறவுகள் அவரை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது . பாரதிதாசனின் இருண்டவீடு போன்றிருக்கும் அந்த வீட்டை எழுத்துச் சாளரம் விரித்து நமக்கு காட்டுகிறார் சிரித்துக்கொண்டே . சாதாரண குடும்ப புராணமாக இதை கடந்துவிட முடியவில்லை. அவ்வளவு உண்மையாக அனைவரையும் விமர்சிக்கிறார் அவரையும் சேர்த்து . நம்மையறியாமல் பல பக்கங்களில் வாய்விட்டு சிரிக்கிறோம் அப்படி ஒரு பகடி. குடும்ப உறவுகள் சிலரை தவறாக சித்தரித்திரித்திருக்கிறார் என்றுச் சொல்லி ஒரு படைப்பையே பல வருடம் அழுத்தி வைத்திருந்ததெல்லாம் தமிழில் நடந்துள்ளது . எப்படி பஷீரின் உறவுகள் இயல்பாய் இந்த புத்தகத்தை அணுகினார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது.
படைப்பு நிகழ்ந்த பிறகு எழுத்தாளன் மறைந்து விடுகிறான் பின் படைப்புதான் என்று சொல்வதுண்டு . ஆனால் நிதர்சனத்தில் படைப்புகள் ஊடே நாம் படைப்பாளியை கண்டடைய முயல்கிறோம். நாம் அடைவது உண்மையான பிம்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்ற உண்மை புரிந்திருந்தும் நம் வாசக மனதில் அது ஒரு அனிச்சைச் செயலாய் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது .அந்த மனதிற்கு தீனியாக சில படைப்பாளிகள் தம் படைப்புகளில் சில கண்ணிகளை விட்டுச்செல்வர் . இவர் இந்த புத்தகம் முழுதும் கண்ணி வெடிகளை விட்டுச்சென்றிருக்கிறார் .
பாத்துமாவின் ஆடு
வைக்கம் முகமது பஷீர்
தமிழில் - குளச்சல் மு .யூசப்
காலச்சுவடு பதிப்பகம்.
