பிரம்மாண்டமும் ஒச்சமும் :
செல்லுலாய்ட் படம் பார்த்திருப்போம். மதராசிகளும் வங்காளிகளும் அசையும் படங்களை எடுக்கும் பொது நாம் ஏன் எடுக்கக்கூடாது என்று மலையாளத்தின் முதல் படத்தினை எடுக்கும் முயற்சியில் தன் சொத்துகளில் பாதியை இழப்பார் J.C. டேனியல். அந்த கால ஜாதிய பிரச்சனையால் முதல் படம் முதல் காட்சியுடன் பெட்டியில் முடங்குகிறது . பின் பல் மருத்துவம் படித்து மருத்துவராகிறார் ,சிறு clinic-நடத்துகிறார் , இருந்தும் கலை ஆசை ஓயவில்லை , மனைவியின் நகைகளை விற்று மதராஸ் சென்று மீண்டும் படம் எடுக்க முயற்சிக்கிறார் இம்முறை சிலரால் ஏமாற்றப்பட்டு , அந்த மன உலைச்சலில் வாழ்க்கையே வெறுத்து ஒரு தமிழக குக்கிராமத்தில் வறுமையில் தன் மீதி வாழ்வை கழிக்கிறார் .
படத்தில் ஒருக்காட்சி வரும் 1965 -முதல் தேசிய விருதை "செமீன் " வென்றதை ரேடியோ பின்புலத்தில் சொல்ல பெட்டிக்கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு எதுவுமே தெரியாதது போல தளர்ந்த நடையில் அந்த முதல் படத்தை எடுக்க முயன்ற கிழவர் சென்றுகொண்டிருப்பார் .இந்தப்படம் J.C. டேனியல் என்று தமிழ்படுத்தப்பட்டு அவர் எடுத்த முதல் படம் போலவே பெட்டியில் தூங்கிக்கொண்டிருக்கிறது.
அவர்தான் அந்த முதல்படத்தை எடுத்தார் என்பதை நிரூபிக்க சம காலத்தில் ஒரு இயக்குனர் பெரும்பாடுபடுவார், இறுதியில் அவரை கவுரவிக்க அரசு சம்மதிக்கும் பொது அவர் இருக்கமாட்டார் இறந்திருப்பார் . இந்த படத்தை பார்க்கும் போதும் பார்த்த பின்னும் சி.சு.செல்லப்பா வை J.C.டேனியலுடன் மனது ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது, வாடிவாசல் படித்திருந்தாலும் அவரைப்பற்றி பெரிதாக தெரியாது . எழுத்து என்ற ஒரு பத்திரிக்கையை நடத்தினார் என்பதும் , புத்தகங்களை தலையில் சுமந்து பள்ளி கல்லூரிகளில் விற்றார் என்பதும் ஒருக்கட்டத்தில் மனைவியின் நகைகளை விற்று புத்தகங்களை வெளியிட்டார் என்ற சில தகவல்கள் மட்டுமே தெரியும் . இருந்தும் அந்த ஒப்பீடு நடந்துக்கொண்டே இருந்தது .
பெரிய புத்தகங்களை வீராப்பாக எடுத்து பாதியில் தொக்கி நிற்கும் கேட்ட பழக்கத்தை இந்த புத்தாண்டில் இருந்து விட எண்ணி 150 பக்கங்களுக்கு மிகாத புத்தகங்களை மட்டுமே எடுப்பது என்று சேகாரங்களை தேடினால் முதலாவதாக கையில் சிக்கியது " பிரம்மாண்டமும் ஒச்சமும் - சி சு செல்லப்பா படைப்புலகம் "படித்துமுடித்தபின் இந்த மனிதனைப்பற்றி கேள்விப்பட்டவை மிகக்குறைவு என்பது விளங்கியது . இந்த புத்தகம் அவரைப்பற்றிய நினைவுகள் விமர்சனங்கள் என்று அவரைப்பற்றிய கருத்துகளின் தொகுப்பு.
மாற்றுக்கருத்தும் விமர்சனங்களும் நல்ல இலக்கியத்தின் அடிப்படை என்ற நம்பிக்கையுடையவர் , தான் எழுதிய ஒரு எதிர் விமர்சனத்தை ஒரு பத்திரிக்கை பிரசுரிக்க மறுக்க , "எழுத்து " என்ற பத்திரிக்கையை தொடங்குகிறார் . பின்நாட்களின் பெரும் ஆளுமைகளாக திகழ்ந்த அனைவரும் "எழுத்தில்" எழுதுகின்றனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் "எழுத்து" மிகப்பெரும் திருப்புமுனையாக அமைகிறது . வீட்டுக்கு வரும் இளம் எழுத்தாளர்களிடம் வகை தொகை இல்லாமல் இலக்கியம் பேசுகிறார் , இல்லாத நிலையிலும் இருப்பதை வைத்து வருபவர்களுக்கு உணவிடுகிறார். வறுமை வாட்ட ஒரு காட்டத்தில் "எழுத்து " வெளிவருவது சிரமத்திற்கு உள்ளாக மனைவியின் நகைகளை விற்று மீண்டும் பிரசுறுக்கிறார். புத்தகங்களை துணி மூட்டை போல சுமந்து கல்லூரி பள்ளிகளில் விற்கிறார் . புத்தகங்கள் போட காசு வேண்டும் என்று காகித பொம்மைகளை செய்து விற்கிறார் . எதை இழந்தாலும் தன்மானத்தையும் தமிழார்வத்தையும் கடைசி வரை தன்னோடு வைத்திருக்கிறார் அந்த காந்தியவாதி . பின்நாட்களில் அவரைப்பற்றி தெரிந்தவர்கள் அவருக்கு தியாகிகள் பென்ஷன் பெற முயற்சிக்க அதற்கும் மறுக்கிறார் . தமிழ் இலக்கியத்தின் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியவர் தன் வாழ்வில் பெரிதாக திருப்பங்கள் ஏற்படுத்திக்கொள்ளாமல் மறைகிறார் .
அவரை சந்தித்தது பற்றி எஸ் ராமகிருஷ்ணன் இந்தக்கட்டுரையில் எழுதியிருக்கிறார் .
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=29
அதில் செல்லப்பாவின் கடைசிக்காலங்களில் அவருக்கு விளக்கு விருது கிடைத்ததை சொல்ல எஸ்.ரா வும் அவர் நண்பரும் செல்கிறார்கள். " விருது வங்குறதுல பெருசா விருப்பம் இல்லப்பா , அதோட கொஞ்சம் காசு கொடுப்பாங்கள அதுல ஒரு புத்தகம் போடலாம் பாரு " என்று சொல்லிவிட்டு தன்னிடம் உள்ள எழுத்துப்பிரதிகளை எடுத்துக்காண்பிக்கிறார். P.S.ராமையா பற்றி ஒரு திறனாய்வை காண்பிக்கிறார் . அப்போது இடைமறிக்கும் நண்பர் உங்கள் சிறுகதை வேளியிடலாமே என்று சொல்ல . இல்ல இல்ல P.S.ராமையா புத்தகம் முதல்ல வரணும் அவரு எவளவு பெரிய ஆளுமை அவர பற்றி அடுத்த சந்ததிகளுக்கு தெரியனும் என்று சொல்கிறார் .
இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று மிரள வைக்கிறார் இவர் . இவரை இதுவரை தெரிந்துக்கொள்ளாமல் இருந்தது நம் துர்பாக்கியம் . . தன் முன்னோடி பற்றிய விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற அவரை , அவரைப்பற்றிய விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் . அவரது புத்தகங்களை வாங்கி படிப்பது மட்டுமே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
செல்லுலாய்ட் படம் பார்த்திருப்போம். மதராசிகளும் வங்காளிகளும் அசையும் படங்களை எடுக்கும் பொது நாம் ஏன் எடுக்கக்கூடாது என்று மலையாளத்தின் முதல் படத்தினை எடுக்கும் முயற்சியில் தன் சொத்துகளில் பாதியை இழப்பார் J.C. டேனியல். அந்த கால ஜாதிய பிரச்சனையால் முதல் படம் முதல் காட்சியுடன் பெட்டியில் முடங்குகிறது . பின் பல் மருத்துவம் படித்து மருத்துவராகிறார் ,சிறு clinic-நடத்துகிறார் , இருந்தும் கலை ஆசை ஓயவில்லை , மனைவியின் நகைகளை விற்று மதராஸ் சென்று மீண்டும் படம் எடுக்க முயற்சிக்கிறார் இம்முறை சிலரால் ஏமாற்றப்பட்டு , அந்த மன உலைச்சலில் வாழ்க்கையே வெறுத்து ஒரு தமிழக குக்கிராமத்தில் வறுமையில் தன் மீதி வாழ்வை கழிக்கிறார் .
படத்தில் ஒருக்காட்சி வரும் 1965 -முதல் தேசிய விருதை "செமீன் " வென்றதை ரேடியோ பின்புலத்தில் சொல்ல பெட்டிக்கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு எதுவுமே தெரியாதது போல தளர்ந்த நடையில் அந்த முதல் படத்தை எடுக்க முயன்ற கிழவர் சென்றுகொண்டிருப்பார் .இந்தப்படம் J.C. டேனியல் என்று தமிழ்படுத்தப்பட்டு அவர் எடுத்த முதல் படம் போலவே பெட்டியில் தூங்கிக்கொண்டிருக்கிறது.
அவர்தான் அந்த முதல்படத்தை எடுத்தார் என்பதை நிரூபிக்க சம காலத்தில் ஒரு இயக்குனர் பெரும்பாடுபடுவார், இறுதியில் அவரை கவுரவிக்க அரசு சம்மதிக்கும் பொது அவர் இருக்கமாட்டார் இறந்திருப்பார் . இந்த படத்தை பார்க்கும் போதும் பார்த்த பின்னும் சி.சு.செல்லப்பா வை J.C.டேனியலுடன் மனது ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது, வாடிவாசல் படித்திருந்தாலும் அவரைப்பற்றி பெரிதாக தெரியாது . எழுத்து என்ற ஒரு பத்திரிக்கையை நடத்தினார் என்பதும் , புத்தகங்களை தலையில் சுமந்து பள்ளி கல்லூரிகளில் விற்றார் என்பதும் ஒருக்கட்டத்தில் மனைவியின் நகைகளை விற்று புத்தகங்களை வெளியிட்டார் என்ற சில தகவல்கள் மட்டுமே தெரியும் . இருந்தும் அந்த ஒப்பீடு நடந்துக்கொண்டே இருந்தது .
பெரிய புத்தகங்களை வீராப்பாக எடுத்து பாதியில் தொக்கி நிற்கும் கேட்ட பழக்கத்தை இந்த புத்தாண்டில் இருந்து விட எண்ணி 150 பக்கங்களுக்கு மிகாத புத்தகங்களை மட்டுமே எடுப்பது என்று சேகாரங்களை தேடினால் முதலாவதாக கையில் சிக்கியது " பிரம்மாண்டமும் ஒச்சமும் - சி சு செல்லப்பா படைப்புலகம் "படித்துமுடித்தபின் இந்த மனிதனைப்பற்றி கேள்விப்பட்டவை மிகக்குறைவு என்பது விளங்கியது . இந்த புத்தகம் அவரைப்பற்றிய நினைவுகள் விமர்சனங்கள் என்று அவரைப்பற்றிய கருத்துகளின் தொகுப்பு.
மாற்றுக்கருத்தும் விமர்சனங்களும் நல்ல இலக்கியத்தின் அடிப்படை என்ற நம்பிக்கையுடையவர் , தான் எழுதிய ஒரு எதிர் விமர்சனத்தை ஒரு பத்திரிக்கை பிரசுரிக்க மறுக்க , "எழுத்து " என்ற பத்திரிக்கையை தொடங்குகிறார் . பின்நாட்களின் பெரும் ஆளுமைகளாக திகழ்ந்த அனைவரும் "எழுத்தில்" எழுதுகின்றனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் "எழுத்து" மிகப்பெரும் திருப்புமுனையாக அமைகிறது . வீட்டுக்கு வரும் இளம் எழுத்தாளர்களிடம் வகை தொகை இல்லாமல் இலக்கியம் பேசுகிறார் , இல்லாத நிலையிலும் இருப்பதை வைத்து வருபவர்களுக்கு உணவிடுகிறார். வறுமை வாட்ட ஒரு காட்டத்தில் "எழுத்து " வெளிவருவது சிரமத்திற்கு உள்ளாக மனைவியின் நகைகளை விற்று மீண்டும் பிரசுறுக்கிறார். புத்தகங்களை துணி மூட்டை போல சுமந்து கல்லூரி பள்ளிகளில் விற்கிறார் . புத்தகங்கள் போட காசு வேண்டும் என்று காகித பொம்மைகளை செய்து விற்கிறார் . எதை இழந்தாலும் தன்மானத்தையும் தமிழார்வத்தையும் கடைசி வரை தன்னோடு வைத்திருக்கிறார் அந்த காந்தியவாதி . பின்நாட்களில் அவரைப்பற்றி தெரிந்தவர்கள் அவருக்கு தியாகிகள் பென்ஷன் பெற முயற்சிக்க அதற்கும் மறுக்கிறார் . தமிழ் இலக்கியத்தின் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியவர் தன் வாழ்வில் பெரிதாக திருப்பங்கள் ஏற்படுத்திக்கொள்ளாமல் மறைகிறார் .
அவரை சந்தித்தது பற்றி எஸ் ராமகிருஷ்ணன் இந்தக்கட்டுரையில் எழுதியிருக்கிறார் .
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=29
அதில் செல்லப்பாவின் கடைசிக்காலங்களில் அவருக்கு விளக்கு விருது கிடைத்ததை சொல்ல எஸ்.ரா வும் அவர் நண்பரும் செல்கிறார்கள். " விருது வங்குறதுல பெருசா விருப்பம் இல்லப்பா , அதோட கொஞ்சம் காசு கொடுப்பாங்கள அதுல ஒரு புத்தகம் போடலாம் பாரு " என்று சொல்லிவிட்டு தன்னிடம் உள்ள எழுத்துப்பிரதிகளை எடுத்துக்காண்பிக்கிறார். P.S.ராமையா பற்றி ஒரு திறனாய்வை காண்பிக்கிறார் . அப்போது இடைமறிக்கும் நண்பர் உங்கள் சிறுகதை வேளியிடலாமே என்று சொல்ல . இல்ல இல்ல P.S.ராமையா புத்தகம் முதல்ல வரணும் அவரு எவளவு பெரிய ஆளுமை அவர பற்றி அடுத்த சந்ததிகளுக்கு தெரியனும் என்று சொல்கிறார் .
இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று மிரள வைக்கிறார் இவர் . இவரை இதுவரை தெரிந்துக்கொள்ளாமல் இருந்தது நம் துர்பாக்கியம் . . தன் முன்னோடி பற்றிய விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற அவரை , அவரைப்பற்றிய விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் . அவரது புத்தகங்களை வாங்கி படிப்பது மட்டுமே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.