![]() |
தொடராக கட்டியிருந்த டியுப் லைட்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே செல்லும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு செல்லும் பாதையை நினைஊட்டியது .அந்த இருண்ட தெருவில் நடக்கும் போதுதான் நாம் நம்மை அறியாமல் விருப்பத்தோடு ஒரு குப்பத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது . இதுதான் அந்த கலக கலைஞனின் வெற்றி. வாசலில் Parking-ல் இருந்தவர்களிடம் இன்னும் - பாடி முடிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு உள்ளே சென்றால் திறந்த மணற்பரப்பில் ஒரு மேடையில் பின் புலமாக ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலும் நிறுத்திவைக்கப்பட ஒரு கட்டுமரமுமாக இருக்க பாரத நாடிய நிகழ்சி நடந்துக்கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டே நகர பக்கத்தில் ஒருவர் பழைய நியுஸ் பேப்பரில் பஜ்ஜியை பரவசத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். உற்று கவனிக்க அந்த கலக கலைஞன்தான்அது . .ஒரு தாயையும் குழந்தையையும் வந்து செல்பி எடுத்து சென்றனர்
பரதநாட்டியத்தை நம்மால் புரிந்துக்கொள்ளமுடியாவிட்டாலும் நன்றாகவே இருந்தது . நிகழ்ச்சியை குப்பத்து குழந்தைகள் அழகாக உரையாடல் போல
தொகுத்து வழங்கினர் . பின் வெள்ள நேரத்தில்
நம்மை காத்தருளிய துப்புறவு தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர்,
அமர்ந்திருந்த அனைவரையும் எழுந்து நின்று கரக்கொஷத்தை
எழுப்ப சொன்னார் T.M.கிருஷ்ணா . மேடையில் நின்ற அந்த துப்புறவு தொழிலாளர்களுக்கு வெட்கமும்
பெருமிதமும் ஒரு சேர முகத்தில்
முட்டிக்கொண்டு நின்றது மகிழ்வாய் இருந்தது
.
பின் ஆவலுடன் காத்திருந்த
ரகு வந்தார் , வண்ண வேட்டிக்கு மாறாக லிவிஸ் ஜீன்சில் வந்திருந்தாது நமக்கு மனக்குரையாய்
இருந்தது . காலில் சலங்கையை கட்டியதும் அந்த குறை நீங்கிற்று . வணக்கம் என தொடங்கினார்
அரசியல்வாதிகல்போல ஆங்கிலத்துக்கு மாறாமல் கொஞ்ச நேரம் தமிழில் பேசி ஆச்சர்யப்படுத்தினார்
தமிழில் ஒரு படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருப்பதகவும் அதனால் கொஞ்சு தமிழ் என்றார் . பின் ஆங்கிலத்திற்கு மாறியவர் TMK-வை
தன் மொழிபெயர்ப்பாளராக வைத்துக்கொண்டார் . அந்த இருபெரும் கலைஞர்கள் விளையாட்டாக சம்பாஷித்துக்கொண்டதே
ஆனந்தமாக இருந்தது .
ஒவ்ஒரு பாடலையும்
விளக்கம் சொல்லிவிட்டு Gud Gudiya வில் தொடங்கினார், . மதன் கார்கி எழுதிய "அம்மா" பற்றிய ஒரு தமிழ் பாடலை பாடினார் . தமிழில் இதுவரை வந்த
அம்மா பாடல்களில் ஒரு முக்கியமான இடத்தை அந்த பாடல் நிச்சயம் பிடிக்கும் . Jag Changa பாடலில் அதகளம் பன்னினார் ,அமர்ந்திருந்த ஒரு பாட்டி ஆட
ஆரம்பித்துவிட்டார் அவ்வளவு அதிர்வை இசையில் உமிழ்ந்தார் . இறுதியாக மண்ணின் மைந்தராய்
Mysore Se Aayi - ல் மங்கலம் பாடினார். பின் பேசிய TMK இந்த விழாவிற்கு சென்ற ஆண்டு
அதிகம் பொருளுதவி செய்தது Ragu dixit -என்பதை அன்போடு நினைவுகூர்ந்தார் ,இவர் நல்ல
இசை கலைஞர் என்பதைக்காட்டிலும் நல்ல மனிதர் என்பது தனக்கு மகிழ்வு என்றும் குறிப்பிட்டார்.
ஒரு சில நிகழ்ச்சிகள்தான்
தனக்கு மன நிறைவைத்தரும் என்றும்
இந்த நிகழ்ச்சி அதில் ஒன்று என்றும் ரகு கூறினார் . நமக்கும் அப்படித்தான்
இருந்தது காரணத்தை யோசித்தால் . எப்போதும் அலங்கரித்த மேடைச்சுவருக்கும் நமக்கும் இடையேதான் இசைக்கலைஞர்கள்
இருந்திருக்கிறார்கள், முதல் முறையாக கிழே
கடல் மணலும் மேலே இருண்ட
வானமும் இருக்க ஆர்ப்பரிக்கும் கடலுக்கும்
நமக்கும் இடையே நின்று அவர்கள்
இசையை வழங்கியது முற்றிலும் மாறுப்பட அனுபவமாக இருந்தது.
https://soundcloud.com/trdp/8-mysore-se-aayi-wav
https://soundcloud.com/trdp/4-gudugudiya-sedi-nodo-wav
https://soundcloud.com/trdp/8-mysore-se-aayi-wav
https://soundcloud.com/trdp/4-gudugudiya-sedi-nodo-wav
