எட்டயபுரத்தில் பிறந்தார், பாஞ்சாலி சபதம் கண்ணன்பாட்டு எழுதினார் திருவல்லிக்கேணியில் சில காலம் வாழ்ந்தார் என்று அவரின் வாழ்க்கை குறிப்புகளை குறிப்பிடிடும் ஏணைய நூல்களை பொல இது இருக்காது என்ற நம்பிக்கையை ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டார் . எழுதியவர் அவரோடு பயணித்த சக பயனியல்லவா பலருக்கு தெரியாத பாரதியின் பல்வேறு முகங்களை தரிசித்த நபரல்லவா.
90 பக்கங்களில் மிக தெளிவாக நறுக்கென்று அந்த ஆளுமையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. சில பகுதிகள் மிக சுவாரஸ்யமாக இருந்தது புதுமணப்பெண்ணாக பாரதியியை எதிர்கொண்டது , புதுச்சேரியில் அந்த கர்ப்பிணி பெண் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் நிகழ்வு (திரில்லர் படத்துக்கு நிகராக ) ,இறுதி காலத்துக்கு முன் ஒரு உறவினர் கல்யாணத்தில் கலந்து கொண்ட கதை (இதை மட்டுமே அழகான குறும்படமாக எடுக்கலாம் ,மாஸ் முடிவு ). முக்கியமாக குவளை கண்ணன் வரும் பகுதிகள் .
பாரதி படத்தில் குவளைக்கண்ணன் பாத்திரம் காட்டப்பட்டது போன்று நிஜத்தில் இல்லை என்பது புரிந்தது . வீராவேசமாக பேசும், கவிதை பாடும் ,மனோதைரியம் நிறைந்தவரான பாரதியார் மனக்கிலேசத்திற்கு ஆளாகிறார் புதுச்சேரி சென்ற புதிதில் . அங்கு யாரையும் அவருக்கு தெரியாது, தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என்று உழன்றுகொண்டிருக்கும் பொது திடீரெண்டு குவளைக்கண்ணன் வருகிறார் அவருக்கு தெரிந்த அவ்வூரின் முக்கிய நபர்களை அறிமுகம் செய்துவைக்கிறார். பாரதி அடுத்து என்ன செய்வது என்று தவித்த நேரத்தில் விளக்காய் வருகிறார் குவளை. " எங்கிருந்தோ வந்தான் " என்று கண்ணன் பாட்டில் பாரதி பாடியது இந்த கண்ணனைதான் என்று செல்லம்மள் குறிப்பிடுகிறார் . கொஞ்சம் புத்தி கம்மி ஒண்ணுக்கு ரெண்டு தடவை சொல்லவேணும் இருந்தாலும் குவளையை அவருக்கு மிக பிடிக்கும் அவன் அப்படித்தான் என்று ஏற்றுக்கொண்டார் அவர் என்றும் குறிப்பிடுகிறார்.
![]() |
| குவளை கண்ணன் |
திருவல்லிக்கேணி கோவில் யானை தள்ளிவிட்ட தருணத்தில் (தூக்கி அடிக்கவில்லை ) மூர்ச்சையாகி யானையின் காலடியில் கிடக்க , யாராவது தூக்குங்க , யாராவது வீட்டுக்கு தகவல் சொல்லுங்க என்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது , தகவல் கேள்விப்பட்ட குவளை ஓடி வருகிறார் கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே பாய்கிறார் யானை பற்றிய பிரக்ஞை எதுவும் அவருக்கு இல்லை பாரதியாரை வெளியே எடுத்து தோளில் போட்டுக்கொண்டு ராயப்பேட்டை ஆஸ்பத்ரிக்கு ஓடுகிறார் . வாசிக்கும் போது மொத்த புத்தகத்தில் இந்த பகுதி அதிக உணர்ச்சிபெருநிலையை ஏற்படுத்தியது . பாரதி என்ற பெரும் ஆளுமையை ரசிக்கும் ஆராதிக்கும் ரசிர்கள் & வாசகர்களின் பட்டியல் ஒரு முடிவிலி . இனிவரும் காலங்களிலும் அந்த பட்டியலில் பெயர்கள் செர்ந்துகொண்டேதன் இருக்கபோகிறது . அந்த பட்டியல் இருக்கும் முதல் பெயர் குவளைக்கண்ணன் . அவரின் அருமை தெரியாத அந்த காலத்திலேயே அவரை ரசித்த ஆராதித்த முதல் ரசிகன் .
பாரதியார் சரித்திரம்
எழுதியவர் : செல்லமா பாரதியார்
பதிப்பகம் : தையால் வெளியீடு
பக்கங்கள் : 96 , விலை : 50

