Sunday, 4 March 2018

நெகிழ்வுகள்





     சுவைத்து உண்டவற்றை திரியுமிடத்திலெல்லாம் எச்சமிடும் பறவைப்போல . வாசித்தவைகளின் மிச்சத்தை கிறுக்கிக்கொண்டு, எழுத்து பாவனை செய்துகொண்டிருப்பவனை . வலைப்பூ துவங்கு என்று முன்பு தூண்டியவர் அண்ணன் மேகநாதன்  . இந்த  வலைப்பூ எழுதியவற்றை முறைப்படுத்தி வைத்துக்கொள்ள சிறப்பாக உதவுகிறது .அவரும் குடும்பமும் சேர்ந்து திருமணத்தன்று ஒரு வலைதளத்தை  veerabagu.com அன்பளித்தது திக்கின்பதில் ஆழ்த்தியது . புகைப்படத்தில் விரிந்திருக்கும் என் மோவாயின் நீளம் அப்போது பளிச்சிட்ட அவ்வின்பத்தின் அளவை சிந்தாமல் சிதறாமல் அப்படியே அழகாய் நிலைநிறுத்தியிருக்கிறது . வலைதளம் ஆரம்ப நிலையில் இருக்கிறது கூடிய விரைவில் முழுமை பெரும்.


    மற்றொரு அதிர்ச்சியாக (அப்படித்தான் இருந்தது எனக்கு) முகநூலில் கிறுக்கியவற்றை தொகுத்து (அதில் இருந்த எழுத்துப் பிழைகளை திருத்தி முறைப்படுத்திய கவிதாயினி கோப்பெருந்தேவி  அக்காக்கு  இங்கே கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொண்டு ) சிறு நூலாக வெளியிட்டார்கள் . முன்னுரை அப்பா எழுதியிருந்தார் , என்னிடம் இதுவரை சொல்லாத சிலவற்றை எழுத்தாக்கி நெகிழ்த்தி இருந்தார் .அந்த நூலை கிராமசேவகருக்கு சமர்பித்தது மட்டுமல்லாமல் , அவர் கையாலேயே அதை வெளியிட்டு அப்பாவை பெறச் செய்தது எனக்கு பெருமகிழ்சியை கொடுத்தது . நானும் அண்ணனும் கிராமசேவகருக்கு சரியானதொரு பாராட்டுவிழா நிகழ்த்த வேண்டும் என்று பேசிக்கொண்டதுண்டு .( பாராட்டு & பிரதிபலன் பற்றியெல்லாம் சிந்திக்காத மகாத்மா அவர்) இருந்தும் அதற்கான களம் கிடைக்காமலேயே இருந்தது எங்களுக்கு . அன்றைய திருமணமேடையை அந்த களமாக்கியதில் பெரும் மனநிறைவு . சார் மேடையில் இருந்ததும் அவர் பேசியதும் அரங்கிலிருந்த அனைவரையும் நெகிழ்த்தியது . ஏனென்றால் எல்லோரும் அந்த துரோணரிடம் வித்தை கற்றவர்கள் .
இவை எதையும் எனக்கு தெரியாமல் மறைத்து என்னுள் அந்த திகின்பத்தித்தை முகிழ்த்தெடுக்க பின்புலத்தில் இறங்கி வேலை பார்த்த Meganathan Jeevanantham , Kopperundevi Senthilnathan , Arun Prakash , Venkatesh Kumar , Vicky Pugazh , Barani Dharan , Srini Vasan அக்கா , தம்பிகள் & மச்சான்களை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.