பச்சையாய் எதுவாகினும் பசிக்காவிடினும்
பல்லினால் பதம்பார்!
ஆடாதொடையென்றால் அதைத்தொடாதே,
கிளுவையா ! அடியொட்ட ஆய்ந்துவிடு .
அசைப்போட ஆலமர நிழல் தேடு .
பெருமழையின் முதல் துளி
முகர்ந்ததும் கொட்டில் நோக்கிச்செல் !
கீதாரியை கீச்சுக் குரலில் கூப்பிடு .
ஆறறிவுக்கு ஒன்று கம்மிதான் என்றாலும் .
இதிலும் அப்படி எண்ணங்கள் இருந்திருக்கும்தானே!
தட்டில் தம்பிவிலாஸ் மூளை மிளகுக்கறி .
27.10.2018
No comments:
Post a Comment