மார்கழி மாலையில் ,முதல் சந்திப்பில்
காபி குவளைதனை நாற்பத்தைந்து பாகை
நளினமாக கவிழ்த்து பருக .
கருவிழிகள் மட்டும் நிமிர்ந்து பார்த்த தருணத்தில்,
"முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் " என
மயக்கும் மாயக்குரல் மனதோடு கேட்க!
எனதான பாடலும் அதன் சூழலும் சூல் கொள்கிறது என்னை.
"சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை " என்பதை
எப்படி சிந்தித்திருப்பார் ! என சிந்திக்கும் வேளையில்- இக்கணம்
நானும் சிந்திக்கவே இல்லை என்பதை சிலிர்ப்பாய் உணர்த்தியது !
நான் சிந்திய சில காபித்துளிகள் .
காபி குவளைதனை நாற்பத்தைந்து பாகை
நளினமாக கவிழ்த்து பருக .
கருவிழிகள் மட்டும் நிமிர்ந்து பார்த்த தருணத்தில்,
"முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் " என
மயக்கும் மாயக்குரல் மனதோடு கேட்க!
எனதான பாடலும் அதன் சூழலும் சூல் கொள்கிறது என்னை.
"சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை " என்பதை
எப்படி சிந்தித்திருப்பார் ! என சிந்திக்கும் வேளையில்- இக்கணம்
நானும் சிந்திக்கவே இல்லை என்பதை சிலிர்ப்பாய் உணர்த்தியது !
நான் சிந்திய சில காபித்துளிகள் .
27.07.16
No comments:
Post a Comment