தேனீர் ஏன் தேனாய் இனிக்கிறது !
சவரப்பெட்டி எங்கே போச்சு!
சவுக்காரம் வைக்கவில்லையா குளிக்க !
சலவைசெய்த சட்டையை சட்டகத்தில் மாட்டிவிடு .
இட்லிக்கு மல்லி சட்டினி அரைச்சிருக்கலாமே !
சர்க்கரை வந்தவள் சாப்பிடாமல் ஏன் காத்துக்கிடக்க !
மீன் குழம்பில் மீண்டும் புளி மிகுந்துவிட்டது .
மாத்திரை கொண்டுவர இவ்வளவு நேரமா!
மின் விசிறியை மிகைப்படுத்திவிட்டு போ .
சாய்வு நாற்காலியில் கண்மூடுகையில் தோன்றுகிறது .
அறுபதை தாண்டியும் ஆறாமல் ,
அப்படியே இருக்கிறது எனதான கிறுக்குத்தனங்கள்.
சுயநலமாக அவளுக்கு முன் போய்விட வேண்டுமென்பதும் அதிலொன்று .
22.07.16
சவரப்பெட்டி எங்கே போச்சு!
சவுக்காரம் வைக்கவில்லையா குளிக்க !
சலவைசெய்த சட்டையை சட்டகத்தில் மாட்டிவிடு .
இட்லிக்கு மல்லி சட்டினி அரைச்சிருக்கலாமே !
சர்க்கரை வந்தவள் சாப்பிடாமல் ஏன் காத்துக்கிடக்க !
மீன் குழம்பில் மீண்டும் புளி மிகுந்துவிட்டது .
மாத்திரை கொண்டுவர இவ்வளவு நேரமா!
மின் விசிறியை மிகைப்படுத்திவிட்டு போ .
சாய்வு நாற்காலியில் கண்மூடுகையில் தோன்றுகிறது .
அறுபதை தாண்டியும் ஆறாமல் ,
அப்படியே இருக்கிறது எனதான கிறுக்குத்தனங்கள்.
சுயநலமாக அவளுக்கு முன் போய்விட வேண்டுமென்பதும் அதிலொன்று .
22.07.16
No comments:
Post a Comment