Thursday, 16 August 2018

மக்சிமஸும் சீவகனும்



தன் வாழ்நாள் எதிரியாக கருதியவன் மாண்டான் என்று நம்பிக்கொண்டிருக்கும் அரசன் . சில ஆண்டுகள் கழித்து மக்கள் குழுமியிருக்க நடைபெறும் ஒரு போட்டியில் அவனை எதிர்கொள்கிறான் . ஒரு போட்டியாளனாக களத்தில் நிற்பவனை பார்க்கமுடியவில்லை தன் கோபத்தையும் ஆற்றாமையையும் கட்டுப்படுத்திக்கொண்டு விம்மிக் கொண்டு நிற்கிறான் .


Maximus யை Commodus அப்படி எதிர்கொண்டதை Gladiator - ல் பார்த்திருப்போம்.சீவகனை கட்டியங்காரனும் அப்படித்தான் எதிர்கொண்டிருக்கிறான் . பொன்னால் வெய்த கவசம் தரித்ததொரு பன்றியை களத்தில் தறிகெட்டு ஓடச்செய்து அதை குறி பார்த்து எய்த வேண்டுமென்பதே போட்டி . எய்தவேண்டிய இலக்கே கண்கூச, வந்த அரசர்கள் அனைவரும் தோற்று விலக வில்லோடு களத்திற்குள் நுழையும் சீவகனை அரசன் கட்டியங்காரன் எதிர்கொள்கிறான். ஒரே காட்சிதான் பாத்திரங்களும் களமும் வேறு வேறாக .

குறிப்பு : சீவக சிந்தாமணி திருத்தக்கத்தேவரால் 9 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது .

#சீவக_சிந்தாமணி
#Gladiator #Maximus

No comments:

Post a Comment