இரண்டாம் வகுப்புக்கு புதிதாக வந்த டீச்சர் . மூன்றாம் வாய்ப்பாடை வாய்விட்டு படிக்கச் சொல்லிவிட்டு வேப்பமர நிழலை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் அனேக ஆசிரியர்களிடமிருந்து மாறுபட்டு புதிதாகத்தான் இருந்தார்.அந்த கிராமத்து தொடக்கப்பள்ளியிலிருந்த எங்களுக்கு வீட்டு காய்கறிகளில் கலர் கலராக அச்சு. காகிதத்தில் பொம்பைகள் . வாரப்பத்திரிகையில் வீடு போன்ற அவர் செய்து காட்டி எங்களையும் செய்யவைத்த விஷயங்கள் ஒருவித மாயாஜாலம் போல இருந்தது . அப்போதெல்லாம் பள்ளிக்கு செல்வதே அவர் வகுப்புக்காகத்தான் . பழைய பல்ப்பின் அடி பாகத்தை மட்டும் உடைத்துவிட்டு மேலே உள்ள கண்ணாடி குமிழுள் காய்ந்த குதிரை வால் புல்லை வைத்து அவர் உருவாக்கிய டேபிள் வெய்ட் மறக்கவே முடியாது . நாலைந்து பழைய பல்ப்பை உடைத்தும் உருப்படியாக தேறாமல் எதோ ஒருமாதிரி ஒன்னை நான் உருவாக்கியது இன்றும் நினைவில் இருக்கிறது .
ஆறேழு மாசம் இருக்கும் நிழல் ஆராச்சியாளர்களின் கண்ணு பட்டதோ என்னவோ திடீரென்று அவர் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார் . தூக்கி கொடுத்த நாய்க்குட்டி இருந்த இடத்தை அடிக்கடி போய் பார்க்கும் நாய் கணக்கா சில நாள் Staff room பக்கம் போய் பார்த்துட்டு பார்த்துட்டு வந்தது நினைவிருக்கு . எல்லாம் நினைவிருந்தும் அவரது பெயரும் முகமும் எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வர மறுக்கிறது . என் வாழ்வில் பின் நிகழ்ந்த கலாப்பூர்வமான விஷயங்களுக்கெல்லாம் முதல் விதையை விதைத்தவர் "முக"வரியற்ற அந்த முதல் குரு .
ஆறேழு மாசம் இருக்கும் நிழல் ஆராச்சியாளர்களின் கண்ணு பட்டதோ என்னவோ திடீரென்று அவர் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார் . தூக்கி கொடுத்த நாய்க்குட்டி இருந்த இடத்தை அடிக்கடி போய் பார்க்கும் நாய் கணக்கா சில நாள் Staff room பக்கம் போய் பார்த்துட்டு பார்த்துட்டு வந்தது நினைவிருக்கு . எல்லாம் நினைவிருந்தும் அவரது பெயரும் முகமும் எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வர மறுக்கிறது . என் வாழ்வில் பின் நிகழ்ந்த கலாப்பூர்வமான விஷயங்களுக்கெல்லாம் முதல் விதையை விதைத்தவர் "முக"வரியற்ற அந்த முதல் குரு .
No comments:
Post a Comment