Thursday, 10 August 2017

உள்ளங்கவர் கள்வர்கள் - அன்குர் ராவுத்தர்



  இயோபு ஆங்கிலேயரிடம் அடிமை சேவகம் செய்த விசுவாசத்துக்கு பரிசாக பெற்ற ஒரு சிறு நிலப்பரப்பில் குறுநில மன்னன் போல ஆதிக்கம் செலுத்தி வருகின்றார் . அங்கு அனுமதி பெறாமல் மரம் வெட்டியதாக சிலரை பிடித்து வருகின்றான் அவர் மகன் . விசாரித்ததில் மதுரை அன்குர் ராவுத்தர் ஆட்கள் என்றும் அந்த கூட்டத்தில் அவன் தம்பியும் இருக்கிறன் என்று சொல்கிறார்கள் .


   இந்த இறுக்கமான சூழலில் அன்குர் ராவுத்தர் அங்கு வருகிறான் ( சில வில்லன்களுக்குதான் அப்படி சிறப்பான அறிமுகக்காட்சி கிடைக்கும் ) , பெரியவருக்கு ஒரு அத்தர் பரிசு கொடுக்கிறான் ஏற்க மறுக்கிறார் . உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு பண்ணிருக்கணும். எங்களிடம் அரசு அனுமதி இருக்கு என்று ஒரு சிட்டையை காட்ட ,ஆக்ரோஷமாகிறார். இது இயோபோட ராஜ்ஜியம்! இங்க எல்லாமே நான்தான் என்று மிரட்டுகிறார். அமைதியாய் கேட்டுக்கொண்டிருக்கும் அன்குர், நான் ஒரு வியாபாரிங்க உங்க தயவு இல்லாம எதுவும் பண்ணமுடியாது! என்கிறான். கோபம் குறையாமல் வெளியே போ ! என்கிறார் பெரியவர் . மெலிதாக புன்முறுவலுடன் வெளியேறுகிறான் .

  அப்போது சற்றே கோபம் தணிந்த இயோபு , இதெல்லாம் பெரிய ராவுத்தருக்கு தெரியுமா ?. அவருக்கு இந்த மாதிரி விஷயங்கள்லாம் பிடிக்காதே என்கிறார் . அப்பா ஆறு மாசத்துக்கு முன்ன இறந்துட்டாரு என அன்குர் சொல்ல . எப்படி? என்கிறார் . இந்தக்காலத்துக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார் . என்னோட தொழில் விஷயங்கள்ல அதிகமா தலையிட்டார் . ஒரு தலைகாணியை முகத்துல அழுத்தி மேல அனுப்பிட்டோம். நானும் சித்தப்பாவும் . என்று சொல்லிவிட்டு அமைதியா அங்கிருந்து வெளியேறுவான் . இயோபு அதிர்ச்சியோடு அவனை பார்த்துக்கொண்டே இருப்பார் .அது இயோபுக்கு இடப்பட்ட எச்சரிக்கை என்பது அப்போது அவருக்கு உரைக்காது . பின்னணியில் இந்த இசை இழைந்துக்கொண்டிருக்கும் .


No comments:

Post a Comment