Friday, 15 September 2017

நம்ம நாட்டு அறிவுஜீவி



ஒரு காலத்தில் அனேக ஆசிரியர்கள் திமுக பற்றுடன் இருப்பார்கள் , குறிப்பாக அண்ணாதுரையின் ரசிகர்களாக .அண்ணாதுரை என்ற பெயரை முதன் முதலில் நான் கேள்விப்பட்டது இரண்டாம் வகுப்பு படிக்கையில்.அந்த வகுப்பு ஆசிரியராக இருந்த திருஞானம் சார் மூலமாக . அவர் தீவிர அண்ணாதுரை ரசிகர் . அடிக்கடி அவரைப்பற்றி பேசுவார் . எதிரே உட்கார்ந்திருக்கும் 6 வயது குழந்தைக்கு அது புரியுமா என்றெல்லாம் யோசிக்கமாட்டார் . அப்படிதான் ஒருமுறை " இந்நாட்டு இங்கர்சால் தென்னாட்டு பெர்னாட்ஷா " என்று சொல்ல . அதில் இங்கர்சால் , பேர்னாட்ஷா ஆகிய வார்த்தைகள் என்னவென்று புரியாமல் அப்பாவிடம் கேட்க . அவர்கள் வெளிநாட்டு அறிவுஜீவிகள் என்று சுருக்கமாக சொன்னார் . அப்போ நம்மநாட்டு அறிவுஜீவி அண்ணா என்ற வகையில் அப்போது புரிந்துகொண்டேன் .


   அண்ணாவைப்போலவே திருஞானம் சாருக்கும் பொடி போடும் பழக்கம் உண்டு . ஒருமுறை அவர் சொன்ன ஒரு சம்பவம் அதை சொன்னவிதமும் சுவாரஸ்யமாக இருந்தது . இப்படி தொடங்கினார் . நம்ம அண்ணா பெரும் மேதையாக இருந்தும் அவரை அறியாமல் சிறுவயதிலேயே இந்த பொடிப்போடும் கெட்ட பழக்கம் ஒட்டிக்கொண்டது .மேடையில் தொடர்ந்து உரையாற்றும் வேளையில் அவரால் பொடி போடாமல் இருக்கமுடியாது .அப்படி பொது மேடையில் பொடி போட்டால் அது அவரை தொடரும் ரசிகர்களிடம் தொண்டர்களிடம் பொடிப்போடும் பழக்கத்தை ஊக்குவிக்கும் செயலாகிவிடுமே என்ற பிரக்ஞை அவருக்கு இருந்தது . அந்தமாதிரி சமயத்தில் என்ன செய்வார் தெரியுமா ! இப்படி பொடியை எடுத்து கையின் மேல்பகுதியில் தேய்த்து வைத்துக்கொள்வார் (அப்படி சொல்லுகையில் இவரும் பொடியை எடுத்து எப்படி தேய்ப்பார் என்று தேய்த்து காட்டுவார் ) . பிறகு மேடை பேச்சின் இடையில் கையில் அவர் தேய்த்த இடத்தில் நாசியை வைத்து மூச்சை இழுத்துக்கொள்வார் (இவரும் அப்படியே இழுத்து பொடி போட்டுவிடுவார் ). அது வித்யாசமாக தெரியாது அவர் பொடியை சுகித்தார் என்பது மேடையில் இருக்கும் சிலரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பார் . எங்களுக்கு அண்ணா பொடி போட்ட விதமும் பொடி என்பது தவறான ஒன்று என்ற விஷயம் மட்டுமே அப்போது மண்டையில் ஏரியது, எங்களை ஏமாற்றி இவரும் பொடிபோட்டார் என்பது புரியாது  ;) . இப்போது யோசிக்கையில் தொண்டர்களிடம் அல்லவற்றை எடுத்துச்செல்லக்கூடாது என்று அண்ணாவிற்கு இருந்த அதே பிரக்ஞை அந்த ஆசிரியருக்கும் இருந்திருக்கிறது என்பது புரிகிறது . இன்று அண்ணா பிறந்தநாள் என்று காலெண்டர் காட்டுகையில் அண்ணாவின் இந்த சம்பவமும் அவரை அறிமுக

No comments:

Post a Comment