ஒரு கதையுண்டு அந்த ஞானி தினமும் கடற்கரையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் பெரும் பறவைக்கூட்டம் அவரை சூழ்ந்துக்கொள்ளும் அவர் மேலே ஏறி விளையாடும் . தினமும் இதை கவனித்த ஒரு சிறுவன் எனக்கு ஒரே ஒரு பறவையை மட்டும் பிடித்துக்கொடுங்கள் நான் வளர்க்க வேண்டும் என்று மன்றாடினான் . சிறுவனின் பேச்சை தட்டமுடியாமல் நாளை ஒரு பறவையை பிடித்து தருகிறேன் என்று வாக்கு கொடுத்து சென்றார் . அடுத்த நாள் ஆச்சர்யமாக ஒரு பறவைக்கூட அவர் பக்கத்தில் வரவில்லை. மனதில் கள்ளம் வந்தவுடன் அவர் இப்போது சராசரி மனிதனாகிவிட்டார் என்பதை பறவைகள் உணர்ந்து விட்டன என்று அந்த கதை முடியும் .
அந்த கதைக்கும் இந்த படத்துக்கும் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் ,அந்த கதை சொல்ல வரும் மையக்கருத்தைதான் இந்த படமுன் விவாதிக்கிறது . இஸ்ரேலின் மொசட் உளவுத்துறையில் உள்ள ஒரு அதிகாரிஅதுநாள் வரை அவன் வாழ்ந்த வாழ்வை பற்றிய அவனது சுயவிசாரணைதான் படம் . அவனுக்கு கொடுக்கப்படும் எல்லா assignment -களையும் வெற்றியுடன் முடிப்பவன் . பெரும்பாலும் கொலைகளாக இருக்கும். அதுபோல அவனுக்கு கொடுக்கப்படும் ஒரு சிறு assignment - எப்படி அவனை முற்றாக மாற்றுகிறது என்பதே கதை . ஹிட்லர் காலத்தில் அவனது இனத்தவரை அழிப்பதற்கு துணைபோன ஒரு அதிகாரியை கண்டுபிடிக்கவேண்டும் . இப்போது அவருக்கு 95-100 வயது இருக்கலாம் அவர் உயிருடன் இருக்கிராரா இல்லையா என்று கண்டுபிடித்து , உயிருடன் இருந்தால் கொல்லவெண்டும் .இதுதான் அவனுக்கு இட்ட வேலை
ஹிட்லர் காலத்தில் நடந்த இன அழிப்பும் நாடு கடத்தல்களின் சுவடுகளும் இன்னும் பல இடங்களில் நீருபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதையும். யூதர்களுக்குள் - ஜெர்மனியர்களுக்குள் இன்னும் புகைந்துக்கொண்டிருக்கும் அந்த பழைய கருப்பு வரலாற்றின் இன பேதத்தையும் பல இடங்களில் காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர்.அந்த கிழவரை கொல்ல சொல்லும் assignment - கொடுக்கும் கட்சியில் நாயகன் சொல்வான் இன்நேரம் அந்த கிழவன் செத்திருப்பான் , இல்லையென்றலும் இன்னும் ஒன்றிரண்டு வருடத்தில் சாகப்போறான் எதுக்கு அந்த சாகப்போற கிழத்த நாம கொல்லனும் ? அதற்கு அந்த மொசட் அதிகரி அவன் உயிருடன் இருந்தால் அவன் உயிரை கடவுளுக்கு முன் நாம எடுக்கனும் என்று பதில் சொல்வார் . எவ்வளவு ஆறாத வன்மன் அவர்களுக்குள் இருக்கிறது என்பதை இந்த காட்சி நமக்கு உணர்த்தும்.
இன அழிப்பு அல்லது போரினால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி நேரடியாக படமெடுக்காமல் அதன் வீரியத்தை மட்டும் ஆழமாய் பார்வையாளனிடம் பதியவைக்கும் சில படங்கள் முக்கியமான படங்களாகின்றன அந்த பட்டியலின் இந்த படத்திற்கு நிச்சயம் இடமுண்டு.
பெயருக்காகவே பார்க்கலாம் : Lior Ashkenazi

No comments:
Post a Comment