படங்களில் பாடப்படும் தாலாட்டுகளுக்கு இசையும் கவித்துவமான வரிகளும் தேவைப்படுகின்றன. நிதர்சனத்தில் அப்படி எங்கும் பாடப்படுவதில்லை. ரே ரே என்றோ லா லா என்றோ ஏதேனும் ஒரு எழுத்தையோ வார்த்தையையோ ஒத்திசைவு ராகத்தில் திரும்ப திரும்ப இழைத்துக்கொண்டிருப்பர். வார்த்தைகள் புரியாத அந்த குழந்தைக்கு வரிகளும் இசையும் தேவைப்படுவதில்லை. அதனுடன் அணுக்கமாய் அன்னை இருக்கிறாள் என்பதை கட்டியம் கூறிக்கொண்டிருக்கும் அந்த சப்தம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது .
அந்த சப்தம், ஒரு அரூபமான மாயக்கயிற்றால் அவர்களை பிணைக்கிறது . அந்த கயிறு, கையில் இருக்கும் நம்பிக்கையில்தான் குழந்தை தூங்கிப்பொகிறது , விழிக்கும்போது கையில் கயிறு இல்லையேல் கதறி அழத்துவங்குகிறது .காணப்பொழுதில் கயிற்றை கையில் திணிக்க சமாதானமாகிறது. நமக்கு பாடப்பட்ட தாலாட்டு நிச்சயம் நமக்கு நினைவிருக்காது . இருந்தும் அம்மாவிற்கும் நமக்குமிடையேயான அந்த மாயக்கயிறு இன்னும் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது .கால ஓட்டத்தால் அதன் நீளத்தில் தடிமனில் அளவு வேறுபட்டிருக்கலாம் அனால் அடியோடு அற்றுப்போவதில்லை.
உலகிற்கே தாயாய் அப்படி ஒரு மாயக்கயிற்றை நம் மீது வீசுகிறார் பாம்பே ஜெயஸ்ரீ "வாத்சல்யம்" மூலம் .இந்திய மொழிகளின் தேர்ந்த தாலட்டுகளின் தொகுப்புடன். "விலை மதிப்பற்ற" என்ற வார்த்தை மலிவாய் பயன்படுத்தப்படும் இந்த காலக்கட்டத்தில் உண்ணமையாகவே விலை மதிப்பற்ற ஒரு இசைக்கோர்வை.
தூக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் இரவுநேரத்தில் இசைக்கவிட்டால் "மண்ணு புகழ் " பாடலின் முடிவில் அல்லது "ஜசோதா ஹரி "பாடலின் சரணத்தில் சாய்த்துவிடுவார் . மற்றவர்கள் போதை வஸ்துக்கள் இன்றி உடலுக்கு உபத்திரவம் இல்லாமல் எப்படி செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பதை சோதித்துப்பார்க்கலாம். பத்து நிமிடத்தில் செவ்வாய் செல்லத்தவறினாலும் சந்திரனில் சத்தியமாக இறங்கிவிடலாம் . எதற்கும் அசையமாட்டோம் என்று சிரிப்பவரா நீங்கள் உங்களுக்காகவே பிரம்மாஸ்த்திரமாக கடைசி பாட்டாய் "ஜோ ஜோ ராமா " வை வைத்திருக்கிறார்.
http://gaana.com/album/vatsalyam
அந்த சப்தம், ஒரு அரூபமான மாயக்கயிற்றால் அவர்களை பிணைக்கிறது . அந்த கயிறு, கையில் இருக்கும் நம்பிக்கையில்தான் குழந்தை தூங்கிப்பொகிறது , விழிக்கும்போது கையில் கயிறு இல்லையேல் கதறி அழத்துவங்குகிறது .காணப்பொழுதில் கயிற்றை கையில் திணிக்க சமாதானமாகிறது. நமக்கு பாடப்பட்ட தாலாட்டு நிச்சயம் நமக்கு நினைவிருக்காது . இருந்தும் அம்மாவிற்கும் நமக்குமிடையேயான அந்த மாயக்கயிறு இன்னும் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது .கால ஓட்டத்தால் அதன் நீளத்தில் தடிமனில் அளவு வேறுபட்டிருக்கலாம் அனால் அடியோடு அற்றுப்போவதில்லை.
உலகிற்கே தாயாய் அப்படி ஒரு மாயக்கயிற்றை நம் மீது வீசுகிறார் பாம்பே ஜெயஸ்ரீ "வாத்சல்யம்" மூலம் .இந்திய மொழிகளின் தேர்ந்த தாலட்டுகளின் தொகுப்புடன். "விலை மதிப்பற்ற" என்ற வார்த்தை மலிவாய் பயன்படுத்தப்படும் இந்த காலக்கட்டத்தில் உண்ணமையாகவே விலை மதிப்பற்ற ஒரு இசைக்கோர்வை.
தூக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் இரவுநேரத்தில் இசைக்கவிட்டால் "மண்ணு புகழ் " பாடலின் முடிவில் அல்லது "ஜசோதா ஹரி "பாடலின் சரணத்தில் சாய்த்துவிடுவார் . மற்றவர்கள் போதை வஸ்துக்கள் இன்றி உடலுக்கு உபத்திரவம் இல்லாமல் எப்படி செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பதை சோதித்துப்பார்க்கலாம். பத்து நிமிடத்தில் செவ்வாய் செல்லத்தவறினாலும் சந்திரனில் சத்தியமாக இறங்கிவிடலாம் . எதற்கும் அசையமாட்டோம் என்று சிரிப்பவரா நீங்கள் உங்களுக்காகவே பிரம்மாஸ்த்திரமாக கடைசி பாட்டாய் "ஜோ ஜோ ராமா " வை வைத்திருக்கிறார்.
http://gaana.com/album/vatsalyam
No comments:
Post a Comment