புகைப்படக்கலை கற்றுக்கொடுக்கக்கூடியதல்ல, அனால் கற்றுக்கொள்ளக்கூடியது ..... மகேஷின் தந்தை
ஒரு நல்ல புகைப்படம் நிகழ காத்திருக்கணும் , நிகழ்த்த முயற்சிக்கக்கூடாது நிகழும் அந்த ஷனத்தை மௌன சாட்சியாய் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே ஒரு நல்ல புகைப்படக்காரனின் வேலை . காத்திருக்கணும் டா - என்று தன் மகனிடம் சொல்லும் அந்த முதிர்ந்த புகைப்படக்காரர். தன் கலையை அவனிடம் திணிக்க முயற்சிக்கவே இல்லை அவனிடம் அந்த மன மாற்றம் நிகழும் வரைக்காத்திருப்பார்.அது போல இந்த படம் நிகழ்த்தப்படவில்லை நிகழ்ந்ததாகவே படுகிறது
துக்க வீட்டில் டீ குடிப்பதில் வரும் சிறு சல சலப்பு போன் வழி அமேரிக்கா சென்று அங்கு ஒரு தம்பதிகளிடம் தகராறு ஏற்ப்படுத்திவிட்டு மீண்டும் இங்கு வந்து அந்த இரண்டு உறவுக்காரர்களிடம் பரவி சமதனத்திற்க்கு சென்றவனிடம் வந்து அவன் அதே வேகத்தில் செல்ல வழியில் வரும் அப்பாவியின் சைக்களை சறுக்கி விட்டு நெல்லிக்காய் வியாபாரியை விழச்செய்து விரக்தியுடன் வீடு திரும்பி வீட்டில் மனைவியிடம் பாரவி அந்த தகவல் போன் மூலம் அண்ணனுக்கு பரவி யாரென்றே தெரியாத கடைக்கு வந்தவனிடம் பரவி உக்கிரமான பந்து போல் வரும் அந்த கோபத்தின் முற்றாய் மகேஷ் நிற்கும் காட்சியில் இயக்குனர் எவ்வளவு முதிர்ச்சியானவர் என்பதைக்காட்டிவிட்டார்.
என்றும் வரும் அவள் வரவில்லையே என்று கண்களால் துழாவி , கண்டுக்கொண்டப்பின் கண்ணில் வெட்கமும் காதலும் புன்முறுவலுடன் தலையை சாய்த்துக்கொண்டு ஒருகையில் வேட்டியை பிடித்துக்கொண்டு வேகமாக மாடிப்படி ஏறும் அந்தக்கட்சியில் நான் மீண்டுவிட்டேன் என்பதை மிடுக்காய் காட்டுகிறார் பஹத். பழிவாங்கல்தான் கரு என்று படத்தின் பெயரே சொன்னாலும் படம் முழுதும் காதலும் பரவிக்கிடக்கிறது.கலை மேல் காதல், அவள் மேல் காதல் , இடுக்கியின் இயற்கை மேல் காதல் என்று கட்சிகள் முழுதும் காதல் கசிந்து கொண்டே இருக்கிறது. பஹத்தின் நடிப்பை இடுக்கியின் இயற்கையை இமியளவு சிந்தாமல் சிதறாமல் பருகிட நிச்சயம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம் .
செம : பஹத்தின் நடிப்பு , அந்த துக்கவீட்டு பாடல் & இடுக்கி பாடல் ,இயல்பான அழகின் இலக்கணமாய் வரும் இரண்டாவது நாயகி ,இறுதி சண்டைக்காட்சி
பெயருக்காகவே பார்க்கலாம் : Fahadh Faasil , Anusree
Trailer : https://www.youtube.com/watch?v=_KY8Du4WWew

No comments:
Post a Comment