சச்சினின் சுயசரிதை புரட்ட வாய்ப்பு கிடைத்தது. தலைகாணி சைஸ் புத்தகமாக இருந்தததால் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் வாசிக்கலாமென்று 96 -உலகக்கோப்பை பகுதியை வாசிக்கத் துவங்கினால் . அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்களை எழுதியிருக்கிறார் .
அந்த உலகக்கோப்பைக்கு முன் பயிற்சிக்கு விடுதி அறையிலிருந்தே மைதானத்திற்கு வீரர்களை ஓட விடலாம் , என அணி நிர்வாகம் முட்டாள்தனமாக ஒரு முடிவு செய்திருக்கிறது . நம்மூர் சாலையில் ஓடுவதும் மைதானத்தில் ஓடுவதும் ஒன்றல்ல அது வீரர்களை காயமடைய வைக்கும் . அதே தூரத்தை மைதானத்தில் ஒடுகிறோம் என்று நிர்வாகத்திற்கு புரிய வைப்பதே வீரர்களுக்கு பெரும்பாடாகிருக்கிறது .
முக்கியமான பாகிஸ்தான் போட்டியை வென்ற பிறகு அவர்கள் பஸ் போன பாதை நெடுக மக்கள் நின்று மலர் தூவியிருக்கிறார்கள். விடுதி சிப்பந்திகள் முதற்கொண்டு அனைவரும் அவர்களை ஒரு மகாராஜா போல கவனித்ததாக குறிப்பிடுகிறார் . அந்த நிலை அரையிறுதியில் இலங்கையிடம் தோற்ற பிறகு வேறு மாதிரியாக இருந்திருக்கிறது . எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்கத்தாவை விட்டு சென்று விடவேண்டும் வீரர்கள் விக்கித்து நின்றிருக்கிறார்கள் . தன் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பிய அந்த நடைதான் தன் வாழ்நாளிலேயே மிகக் கொடுமையான நீண்ட பயணம் என்று குறிப்பிடுகிறார் சச்சின் .
அந்த போட்டிக்கு கொல்கத்தா பிட்ச் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவந்த மண்ணை நிரப்பி புதிதாக உருமாற்றிய ஒரு தகவலைக் குறிப்பிடுகிறார் . அந்த அரையிறுதி தோல்விக்கு இந்த சோதனை முயற்சி கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 98/1 என்ற நல்ல நிலையிலிருந்த இந்தியா அடுத்த 22 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்தது.
பெரிய மனச்சோர்வை மொத்த அணிக்கும் அந்த உலகக்கோப்பை கொடுத்துச்சென்றிருக்கிறது . அதிலிருந்து விடுபட இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்று மீண்டும் தோல்வியுடன் திரும்பிய அணித்தலைமைப் பொறுப்பை ஆசாரிடமிருந்து சச்சினுக்கு கொடுத்திருக்கிறார்கள் .அந்தச் சுற்றுப் பயணம் எங்களுக்கு தோல்வியைக் கொடுத்தாலும் இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நம்பிக்கை முகங்களை அளித்துச் சென்றது.இங்கிலாந்து சுறுப்பயணத்தில் புதிதாகா அணியில் அறிமுகமான இருவர் நம்பிக்கைக் கொடுத்தனர் என்கிறார் .
ஒருவர் இந்தியாவின் சுவராக பின் பரிணாமித்த டிராவிட் மற்றவர் கைவிட்டுப் போன உலகக்கோப்பையை மீண்டும் வெல்ல வலுவானதொரு அடித்தளத்தை அடுத்த 15 ஆண்டுகள் அனைத்துத் தளங்களிலும் ஏற்படுத்திவிட்டுச் சென்ற சௌரவ் கங்குலி .
அந்த உலகக்கோப்பைக்கு முன் பயிற்சிக்கு விடுதி அறையிலிருந்தே மைதானத்திற்கு வீரர்களை ஓட விடலாம் , என அணி நிர்வாகம் முட்டாள்தனமாக ஒரு முடிவு செய்திருக்கிறது . நம்மூர் சாலையில் ஓடுவதும் மைதானத்தில் ஓடுவதும் ஒன்றல்ல அது வீரர்களை காயமடைய வைக்கும் . அதே தூரத்தை மைதானத்தில் ஒடுகிறோம் என்று நிர்வாகத்திற்கு புரிய வைப்பதே வீரர்களுக்கு பெரும்பாடாகிருக்கிறது .
முக்கியமான பாகிஸ்தான் போட்டியை வென்ற பிறகு அவர்கள் பஸ் போன பாதை நெடுக மக்கள் நின்று மலர் தூவியிருக்கிறார்கள். விடுதி சிப்பந்திகள் முதற்கொண்டு அனைவரும் அவர்களை ஒரு மகாராஜா போல கவனித்ததாக குறிப்பிடுகிறார் . அந்த நிலை அரையிறுதியில் இலங்கையிடம் தோற்ற பிறகு வேறு மாதிரியாக இருந்திருக்கிறது . எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்கத்தாவை விட்டு சென்று விடவேண்டும் வீரர்கள் விக்கித்து நின்றிருக்கிறார்கள் . தன் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பிய அந்த நடைதான் தன் வாழ்நாளிலேயே மிகக் கொடுமையான நீண்ட பயணம் என்று குறிப்பிடுகிறார் சச்சின் .
அந்த போட்டிக்கு கொல்கத்தா பிட்ச் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவந்த மண்ணை நிரப்பி புதிதாக உருமாற்றிய ஒரு தகவலைக் குறிப்பிடுகிறார் . அந்த அரையிறுதி தோல்விக்கு இந்த சோதனை முயற்சி கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 98/1 என்ற நல்ல நிலையிலிருந்த இந்தியா அடுத்த 22 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்தது.
பெரிய மனச்சோர்வை மொத்த அணிக்கும் அந்த உலகக்கோப்பை கொடுத்துச்சென்றிருக்கிறது . அதிலிருந்து விடுபட இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்று மீண்டும் தோல்வியுடன் திரும்பிய அணித்தலைமைப் பொறுப்பை ஆசாரிடமிருந்து சச்சினுக்கு கொடுத்திருக்கிறார்கள் .அந்தச் சுற்றுப் பயணம் எங்களுக்கு தோல்வியைக் கொடுத்தாலும் இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நம்பிக்கை முகங்களை அளித்துச் சென்றது.இங்கிலாந்து சுறுப்பயணத்தில் புதிதாகா அணியில் அறிமுகமான இருவர் நம்பிக்கைக் கொடுத்தனர் என்கிறார் .
ஒருவர் இந்தியாவின் சுவராக பின் பரிணாமித்த டிராவிட் மற்றவர் கைவிட்டுப் போன உலகக்கோப்பையை மீண்டும் வெல்ல வலுவானதொரு அடித்தளத்தை அடுத்த 15 ஆண்டுகள் அனைத்துத் தளங்களிலும் ஏற்படுத்திவிட்டுச் சென்ற சௌரவ் கங்குலி .
No comments:
Post a Comment