Thursday, 10 January 2019

Njan Prakashan - Sathyan Anthikad - 2018



நாலு வரியில் சொல்லிவிடுகிற கதை, இருந்தும் கதைச் சொல்லலைக்காட்டிலும், இறுகிக்கிடக்கும் ஒரு மனித மனதில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் நிகழும் மாற்றத்தையும் அது நிகழ காரணமாக இருந்த மனிதர்களையும் சூழலையும் நமக்கு விளங்கவைப்பதே இயக்குனரின் நோக்கமாகிறது . ஒரு மலர்தலை படம் பிடித்துக்காட்டுவது போல இதை இரண்டு மணிநேரம் ரசமாக பார்வையாளனுக்கு பகிரமுடியும் என்ற இயக்குனரின் நம்பிக்கையும் அதை செய்துக்காட்டிய விதமும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது . அது அவர் மேலும் பகத் மேலும் கொண்டிருந்த நம்பிக்கையென்றே தோன்றுகிறது .இறுதிக்காட்சிக்கு முன் அந்தத் தாயிடம் விடைபெறும் காட்சியில் பகத் நடிப்பில் உச்சம் தொட்டாரென்றால் . அவன் சொல்லும் பொய்க்காதலை மேய்க்காதலென்றெண்ணி மேலுதட்டுப் புன்னகையில் நடிக்கும் நிகிலா மற்றொரு முனையில் நியாயம் செய்கிறார். இந்த ஆண்டின் கணக்கு ப்ரகாஷுடன் துவங்கியது .

No comments:

Post a Comment