Monday, 17 December 2018

நாமளா சொல்லிகிட்டாதான் உண்டு

கனன்றுதிர்ந்துக் கொண்டிருந்த
கரித்துகள்களுக் கிணையாக
கண்ணீர்த்துளிகள்.
சுடுகாடு .

....................................


சுட்டுச் சுழன்றுக் கொண்டிருப்பது உணவு மட்டுமல்ல ,
உயிரும்கூட என்று எப்படி உணர்த்துவேன்.
சிக்கன் ! சிக்கன் ! என்று குதூகலிக்கும் குழந்தையிடம் .

...................................

உம்மிடம் சமர் நிற்க எம்மிடம் ஆயுதமில்லை !
நீ சுமந்து நிற்கும் ஆயுதத்தை ஆயாசத்தோடு பார்த்து நிற்போம் .
ஊடே வாய்ப்பு வாய்க்கையில் நாளு சொற்களை சொடுக்கி
உன் மேல் உமிழ்ந்தெறிவோம் . அது நிகழ்த்தபோவது ஏதுமில்லை
விலையில்லா விட்டில் இதயங்களைத்தவிர என்றுணர்ந்தும்
ஏகுவோம் ! உம்மிடம் சமர் நிற்க எம்மிடம் ஆயுதமில்லை !

No comments:

Post a Comment