வீட்டினுள் நுழைந்த நண்பருக்கு அதிர்ச்சி , முற்றத்தில் நின்றுகொண்டு பஷீர் அக்ரோஷமாக மகளை பார்த்து கத்திக்கொண்டிருந்தார் . அப்படியொரு ரூபத்தில் பஷீரை அதுவரை அவர் கண்டதில்லை. இவர் உள்ளே சென்றும் சப்தம் குறைந்தபாடில்லை . ஏதோ பெரிய பிரச்னை நடந்திருக்கிறது தவறான நேரத்தில் நாம் வந்து சிக்கிக்கொண்டோம் என்றெண்ணியவரே . மகளிடம் மெதுவாக விசாரித்தார் .சிரித்துக்கொண்டே ! அது ஒண்ணுமில்லை, இந்த ரோஜா செடியிலிருந்த புழுவை வெளியே எடுத்துப் போட்டுவிட்டேனாம் , அதற்கு அரைமணிநேரமாக கத்திக்கொண்டிருக்கிறார் .
ரோஜாச்செடி உனக்கு காண்பதற்கு, அது போல புழுவுக்கு உண்பதற்கு . அதை தட்டி வெளியே போட உரிமையை யார் உனக்கு தந்தது ? என்கிறார் டாட்டா என்றாள் .இந்த விஷயத்தில் பஷிரைப் பற்றித் தெரியுமென்பதால் நண்பர் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை . முன்பொருமுறை சுலைமானி குடித்த குவளையை குடித்த பின் அடிக்கடி கவிழ்த்து வைப்பதை கவனித்து , ஏன் என்று கேட்டதற்கு " கொஞ்சமாவது அறிவு இருக்கா ? பொன்னு சாரே, இந்த குவளையில் கொஞ்சம் மிச்சமிருக்கும் சாயாவில் எறும்புகள் வந்து விழுந்து செத்துபோகும் . அதை தவிர்க்கத்தான் கவிழ்த்தி வைக்கிறன் என்றவரல்லவா .
அடிப்படையில் காந்தியத்தின் காதலராக அறியப்பட்ட பஷீர் ,இளம் வயதில் ஒருவரை கொலை செய்யவேண்டுமென்று தீவிரமாக அலைந்து கொண்டிருந்திருந்தார் என்பது விசித்திரமானச் செய்தி . தன்னை சிறையில் வன்மத்தோடு அடித்த அதிகாரியை கொன்றே தீருவதென்று முயற்சித்தவரை சக சிறைவாசி பேசி பேசி கரைத்திருக்கிறார் . 1931-32 காலகட்டங்களில் பகத்சிக்கின் தீவிரவாதம் பக்கம் ஈர்ப்பு ஏற்பட்டு அங்கு சென்ற நேரம் அது .பின் குறுகிய காலத்தில் காந்தியத்திற்கு திரும்பினார் . சக மனிதனை கொல்லவேன்றுமென்றிருந்த பஷீருக்கும் புழுவின் உணவிற்காக எறும்பின் வாழ்விற்காக யோசிக்கும் மனிதரான பஷீருக்கும் இடையேயான பயணம்தான் அவரின் வாழ்வு .

No comments:
Post a Comment