Monday, 14 August 2017

Cléo from 5 to 7 - 1962 - Agnès Varda



   ஒரு புலி நமக்கு பின்னே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் . நமது பிரக்ஞையில் அது வராத வரை அதாவது நமக்கு அது இருப்பது தெரியாதவரை . அங்கு நிதர்சனத்தில் புலி இருந்தாலும் நமக்கு அது இல்லைதான் . அதன் இருப்பை உணர்ந்தால் ஏற்படும் பதற்றம், பயம் எதுவுமே அந்த நிலையில் நம்முள் இருக்காது .இதேபோன்று இல்லாத புலியையும் நாம் கற்பனை செய்து பீதி கொள்ளலாம் .இரண்டிலும் மனமே மையம் , இது ஒரு மாய விளையாட்டு நாமும் பல முறை நம்மையறியாமல் அந்த விளையாட்டில் பங்கு பெற்றிருப்போம். அப்படி ஒரு மனவிளையாட்டைப் பற்றிய படம் இது .


  பிரபல பாடகி அவள் , தனக்கு புற்று நோய் வந்திருப்பதாக நினைக்கிறாள் . அதற்கான சோதனை முடிவு மாலை 7 மணிக்கு கிடைக்கவிருக்கிறது . இந்த இடைப்பட்ட இரண்டுமணி நேரத்தில் அவளைச்சுற்றி நடப்பவை எல்லாமே எதிர்மறையாக தோன்றுகிறது . எல்லா சம்பவங்களும் அவளை சாவை பற்றிய எண்ணத்திற்கே இட்டு செல்கின்றன .அவளது மனக்கிலேசமும் அதிலிருந்து அவள் வெளிவர படும் பாடும் . 5 மணியிலிருந்து 7 மணிவரை இரண்டுமணிநேரம் அவள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதும்தான் படம் . 55 ஆண்டுகளுக்குபின்னும் நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறது .

No comments:

Post a Comment