Monday, 15 May 2017

LENS - 2017 - Jayaprakash Radhakrishnan 





   ஒரு நல்ல கவிதைக்கு நேர்த்தியான சொற்கட்டுமானம் மட்டுமே போதுமா அல்லது நல்ல பொருளும் வேண்டுமா ? நல்ல உணவுக்கு சுவை மட்டுமே போதுமா ? அல்லது அவை தரும் ஆரோக்யமும் அவசியமா ? இப்படி எல்லா கலைகளிலும் இரண்டு பக்கங்களை பற்றி விவாதங்கள் நடத்திக்கொண்டே இருக்கலாம் . இவையிரண்டும் சரியான விகிதத்தில் கலந்த சில படைப்புகள் உன்னதமாக பார்க்கப்படுகின்றன உதாரணத்திற்கு சங்க பாடல்களைப்போல அல்லது தேனைப்போல . சுவை , சொற்கட்டு போன்ற நகாசு எளிதாக பெருவரியானவர்களை கவர்கிறது என்பது உண்மை. . திரைப்படங்களுக்கும் இவை பொருந்தும் சுவாரஸ்யம் மட்டுமே போதுமா, அல்லது அது நம்மிடம் விட்டுச் செல்லும் அல்லது நம்முள் உருவாக்கும் கருத்தாக்கங்களும் (நரம்பு புடைக்க சத்தமாக நாயகன் பேசும் கருத்துக்கள் அல்ல இயக்குனர் நமக்கு உணர்த்த விரும்பும் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள் ) அவசியமா? .அரிதாகவே சிலப்படங்கள் இந்த இரண்டையும் செவ்வனே ஒருங்கேபெற்று வருவதுண்டு . "லென்ஸ்" அப்படிப்பட்ட படைப்பு . அவர்களுக்கு கிடைத்த பொருளாதார எல்லைகளை வைத்துக்கொண்டு நிறைவாய் படைத்திருக்கிறார்கள்.

நாம் சில மெய்நிகர் குற்றங்களில் கர்த்தாவாக இல்லாமலிருக்கலாம் . ஆனால் பார்வையாளர்களாக பங்குதாரர்களாகவே இருக்கின்றோம் . பிரக்ஞை இன்றி வந்து விழுபவற்றை வாங்கி எரியும் செங்கல் அடுக்கும் சித்தாள் போல -Forward களை பறக்க விடுகிறோம் . அது ஏற்படுத்தப்போகும் பாதிப்பின் வீரியம் உணராமல் . மெய்நிகர் உலகில் நம்மால் சிறிய விஷயமாக பார்க்கப்படும் ஒன்றின் வீரியத்தை நமக்கு உணரவைக்கிறார் .

மிகக்குறைந்த கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் அல்லது சில காத்திரமான படங்களைப்ப்பார்க்கும்போது ,நமது தமிழ்ச்சூழலில் அது போன்ற படைப்புகளுக்கான வாய்ப்புகளே இல்லை என்ற என் எண்ணத்தை பொய்யாக்கிவிட்டார் இயக்குனர் . இந்த ஆண்டு நல்ல படைப்புகள் என்று கொண்டாடப்பட்ட வந்த D16, மாநகரம் , குற்றம்- 23 , 8 -தோட்டாக்கள் வரிசையில் இந்த படத்தையும் வைக்கலாம் . அந்த பட்டியலில் முதலிடத்திற்கு தகுதியானது .

No comments:

Post a Comment