Wednesday, 7 September 2016


அலங்கார  மலர்கள்

வந்த வேலை முடித்து -வழியற்று
வாழ்வின் கடைசி நிமிடங்களை
எண்ணிக்கொண்டு வாட முற்படும்,
நிகழ்ந்த திருமணத்தின் அலங்கார மலர்கள்.
அனிச்சையாய் ஆர்ப்பரிக்கின்றன- ஆரும்
அறியாது அதிலொன்றை அவிழ்க்கும்
மரணத்தை ஸ்நூஸ் செய்த
சிறுமியின் சிறு முகம் பார்த்து .

2016 SEPTEMBER 07

No comments:

Post a Comment