Wednesday, 29 June 2016

மீயொலி மீட்டல்




அவ்வளவு முறை சொல்லியும் – கேட்காமல்,
காதோரம் மென்காற்றை உமிழ்கிறாய் !
மீயொலிக்கு சற்று அதிகமாக எப்படி
உன்னால் மட்டும் மீட்டமுடிகிறது? - இந்த கிசுகிசுப்பை.
முடிவுகள் மாறப்போவதில்லை என்று தெரிந்தும்
பாவ்லாவின் நாய்-மணி சோதனையை
நாழிக்கொருமுறை சோதித்துப்பார்ப்பதேன்?
சோதனைக்கு பிறந்தவளே!
29.06.16



No comments:

Post a Comment