Sunday, 10 January 2016

Usthad Hotel / 2012 / Malayalam




எப்படி நேர்த்தியாய் தொழில் செய்வதென்பதை நான் சொல்லிக்கொடுத்துவிடேன் . எதற்காக தொழில் செய்யவேண்டும் என்று நீ சொல்லிக்கொடு ......


     இந்த வாசகம் எழுதப்பட்ட சீட்டுடன் கரீம் இக்கா தன் பேரனை ஒருவரிடம் அனுப்பிவைப்பார் . நன்றாக யோசித்தால் மொத்த படத்தின் சாராம்சமும் இந்த வரிகளிள் அடங்கிவிடுகிறது .ஆரம்பத்தில் இது ஒரு விடலை பையனின் வாழ்க்கை பற்றிய படமோ என்று தோன்ற, பின் நாயகி வந்தவுடன் ஒரு அழகான காதல் கதையோ என்று தோன்ற , பின் கரீம் இக்கா வந்தவுடன் தாத்தா-பேரன் பற்றிய உணர்ச்சிபூர்வ கதையோ என்று தோன்ற செய்கிறது . கடைசியாக எல்லாம் சேர்ந்த படம் என்ற நினைப்பை ஏற்ப்படுத்துவது மட்டுமல்லாமல் .இது நம்மை பற்றிய படம் என்ற எண்ணத்தையும் . நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் எதற்க்காக செய்துகொண்டிருக்கிறோம் என்ற பெரும் கேள்வியை எழுப்பிவிட்டு நிறைவடைகிறது .

    திலகன் என்ற மாநடிகன் கரீம் இக்காவாக வாழ்ந்திருக்கிறார் . ஜெயமோகனின் சொற்றுக்கணக்கு சிறுகதையில் தக்கல் சாகிபு பற்றிய விவரணைகள் படிக்கும்போது என் கண் முன் திலகன் தக்கல் சாகிபாய் வரிந்து நின்றார் . தக்கல் சாகிபும் - கரீம் இக்கவும் வேறுவேறு நபர்கள் அல்ல என்றே நான் நினைக்கிறேன் , இருவரின் நோக்கமும் செயலும் ஒன்றே . அவர்களின் அறம் ஒன்றே .

   சில படங்கள் நம்மை ஒருவித உணர்ச்சிப்பெரு நிலைக்கு கொண்டுசெல்லும். சில அந்த நிலையை சில நாட்களுக்கு நம்முள் நிலைநிறுத்தி வைத்திருக்கும் . இது அந்த வகை படம் .

செம : இறுதி காட்சியில் இக்கா தானம் பெற்று உண்ணும் காட்சி .

பெருக்ககவே பார்க்கலாம் : Director : Anwar Rasheed Written by : Anjali Menon Starring :
 Thilakan , Dulquer Salmaan

Trailer : https://www.youtube.com/watch?v=Z1m3y4L1yzY

No comments:

Post a Comment